Wednesday, July 2, 2008

வணக்கம்.

வணக்கம். ஏதோ ஆர்வத்தில் ஒரு ப்ளாக்கர் கணக்கை தொடங்கியாச்சு. ஆனா என்ன எழுதறதுன்னு தான் தெரியலை. எந்த ஒரு விஷயத்தைப் பத்தியும் ஆழ்ந்த அறிவு இல்லாமலே வளர்ந்தாச்சு. ஒவ்வொரு விஷயத்தைப் பத்தியும் மத்தவங்க எழுதுனத படிக்கும்போது ஒரே பிரமிப்பா இருக்கு. உள்ளூர் அரசியல், உலக அரசியல், பொருளாததரம், பூகோளம், விலைவாசி உயர்வு, பணவீக்கம் அப்டீன்னு நம்ம வலைப்பதிவர்கள் தொடாத விஷயமே இல்லை. ஆனா அதுல எந்த ஒரு விஷயத்தைப்பத்தியும் நமக்கு அனா, ஆவன்னா கூடத் தெரியலையேன்னு நினைக்கும் போது நம்மளப்பத்தி நமக்கு இருக்கற அபிமானம் அப்பிடியே தலைகீழாயிடுது.

சரி. இனிமேயாச்சும் ஏதாவது உருப்படியா எழுதனும்ன்னு ஒரு மதிய தூக்க முடிவில்(ஆபீஸ்ல இல்லை சாமி, வீட்லதான்) முடிவு பண்ணிட்டேன். எழுதறதுக்காவது படிக்கனும்ன்னும் முடிவு பண்ணிட்டேன். பாஸ் பண்ற அளவுக்கு மட்டும் பள்ளிக்கூடத்துல படிச்சதனால, எதுனா இங்கலீஷ்ல படிக்கறதுன்னாலே ஒரே உதறல். பார்ப்போம் வழக்கம்போல தீர்மானம் மட்டும் போட்டுட்டு அப்புறம் கண்டுக்காம விட்டுடற என்னோட சோம்பேறித்தனத்தை நினைச்சு நோகாம இருக்க முடியலை.

புரியாத விஷயங்களை முதல்ல தொடலாமான்னு ஒரு யோசனை. நம்ம வீட்டு பெரியவங்க எது கஷ்டமானதோ அதை முதல்ல முடி, அப்டீன்னு, அதைப் போல புரிஞ்சுக்கறதுக்கு கஷ்டமானதா ஆரம்பிக்கப்போறேன். ஆனா 0 லேந்து ஆரம்பிக்கறதுனால எல்லாமே கஷ்டமானத இருக்கு. ரொம்ப யோசனைக்கு அப்புறம், ஆன்மீகத்த தொடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்காக சுகபோதானந்தா மாதிரி பெரிய பிரசங்கமெல்லாம் எதிர்பார்க்காதீங்க. எல்லாமே காபி பேஸ்ட் தான். எழுதற சாக்கிலேயாவது புரிஞ்க்கலாம்ன்னுதான். முதல் வேலையா, ராமக்ருஷ்ண மடத்துக்கு போய் உபநிஷதங்களைப் பத்துன புத்தகங்களை வாங்கி கிட்டு வந்துட்டேன். அதுலேந்து ஒவ்வொண்ணா உருவி எழுதப்போறேன்.

நான் சொல்ல வர்றது என்னான்னா, இனிமே சில அமெச்சூர் தனமான ஆர்டிகில்ஸ் என்கிட்டேந்து வரும்.

டிஸ்கி : எழுதறதுல போதுமான விஷ்யஞானமெல்லாம் எனக்கு கிடையாது. சந்தேகங்களைக் கேட்டு தயவு செஞ்சு என்ன சங்கடப்படுத்தாதீங்க. மேற்கொண்டு உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமுன்னா, பின்னூட்டங்களா எழுதுங்க. கடுமையான சொற்களை தயவு செஞ்சு தவிர்த்திடுங்க.

2 comments:

சுயம்பு மூர்த்தி said...

test comment

கோவி.கண்ணன் said...

//சந்தேகங்களைக் கேட்டு தயவு செஞ்சு என்ன சங்கடப்படுத்தாதீங்க.//

இப்படி வெளிப்படையாக சொல்கிற உங்க பணிவு பிடிச்சிருக்கு !

:)