'ஈசாவாஸ்யம் இதம் சர்வம்' என்ற மந்திரத்துடன் ஆரம்பிப்பதால் இது ஈசாவாஸ்ய உபநிஷதம் என்ற பெயர் பெற்றது. ஈச உபநிஷதம் என்றும் அழைக்கப்படுகின்ற இது பதினெட்டு மந்திரங்களே உடைய சிறிய உபநிஷதம் ஆகும்.
யஜூர் வேதத்தில் கிருஷ்ண யஜூர் வேதம், சுக்ல யஜூர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. சுக்ல யஜூர் வேதத்தில் வாஜஸனேய சம்ஹிதையில் நாற்பது அத்தியாயங்அளில் கடைசி அத்தியாயம் இது. தத்யங் அதர்வணர் என்ற முனிவர் தமது மகனுக்கு இதனை உபதேசித்தார். அவன் ஆசைகள் அற்றவனாகவும் முக்தியில் தீவிர நாட்டம் கொண்டவனாகவும் இருந்ததால் அந்த முனிவர் அவனுக்கு இந்த உபநிஷதத்தை உபதேசித்தார்.
'இருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்துகொண்டேன்' என்று ஆனந்த மிகுதியில் முனிவர் ஒருவர் கூறுவதை சுவேதஸ்வதர உபநிஷதத்தில் காண்கிறோம். ஆனால் அந்த ஒளிக்கு அப்பால் உள்ள ஒன்றைத் தேடுகின்ற முயற்சியை இங்கே பார்க்கிறோம். ஈச வித்யை என்று இந்த உபநிஷதம் கூறுகின்ற இந்தக் கருத்தே ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் மையக் கருவாக உள்ளது.
ஒளிக்கு அப்பாலுள்ள ஒன்றைத் தேடும் முயற்சியையும் ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதையும் படிப்படியாக இங்கே நாம் காண்கிறோம்.
மூலம் : ஈசாவாஸ்ய உபநிஷதம், ராமகிருஷ்ண மடம், சென்னை.
Friday, July 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment